இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நிலமுடையீர்
ஊரை வளைத்துச் சுரண்டிப் பிழைக்கும் நிலத்தை உடையவரே! சீரைத் தரும் நம் இறைவன் உலகை வாழ்வு சிறப்புறவே
யார்க்கும் ஈந்தான் அன்புப் பரிசாய்; என்றன் மொழிகேளீர்: ஆர்க்கும் பசிக்குப் பிடிசோ றுண்பீர் அதற்கும் மேலாகப்
புதைக்கும் குழிக்குள் வேண்டும் போது போனால் போதாதோ? அதையும் உங்கள் உடைமைப் பிடிக்குள் அடக்கப் பாராதீர்.