இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாட்டு
மாந்தனின் வெற்றி தோல்வியை, மண்ணில்
ஏந்திய கதையை இயம்புதல் பாட்டு;
துன்புறு நெஞ்சின் துடிப்பே பாட்டு;
முறையீட் டுரையின் முனைப்பே பாட்டு.
குறித்தஓர் சமூகக் குறைகளை ஆய்ந்து
நெறியுடன் எழுச்சி, நிரம்பு பட்டறிவுக்
கலைமனத் தோடது கனன்றால்
உலகுக் கதுவே உயிா்நிலைப் பாட்டாம்.
65