பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

     பாட்டு

     மாந்தனின் வெற்றி தோல்வியை, மண்ணில்
     ஏந்திய கதையை இயம்புதல் பாட்டு;

     துன்புறு நெஞ்சின் துடிப்பே பாட்டு;
     முறையீட் டுரையின் முனைப்பே பாட்டு.

     குறித்தஓர் சமூகக் குறைகளை ஆய்ந்து
     நெறியுடன் எழுச்சி, நிரம்பு பட்டறிவுக்
     கலைமனத் தோடது கனன்றால்
     உலகுக் கதுவே உயிா்நிலைப் பாட்டாம்.

65