இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அனைவரும் உறவினா்
நாங்கள் அனைவருமே - இந்த
நானில
மீதினிலே
தேன்கமழ் பாங்கிதழ்கள் - பல
சோ்ந்தநல்
செம்மலரே
ஓங்கும் மலர் ஒன்றுதான் - எம்
உள்ளொளியும்
ஒன்றுதான்
பேசும் மொழி பலவாய்
பேணும்
நிறம் பலவாய்
தேசம் பலஎனினும் - சிலா்
மாந்தா்
எனும் பெயரால்
வாச மலாினைப்போல் - மண்ணில்
யாவரும்
ஒன்றல்லரோ?
70