இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சிறந்தோன்
ஓடும் குருதியில்
நெருப்பின் அலைகள் பாய்ந்தாற்போல்
பாடும் பாடலில்
காதல் வேட்கை படரட்டும்;
பாடு பொருளில்
குறிக்கோள்கள் அற்றால் பாட்டேது?
தேடும் பொருளாய்ப்
பாட்டானால் அதில் தீயேது?
கலையில் சிறந்தோன்
இயற்கை அனைத்தும் கைக்கொண்டு
வலைச்சொற் குள்ளே
குறிக்கோள் வாழ்க்கை வளைக்கின்றான்;
நிலைபெற்றிடும் ஒரு
புத்துலகத்தை நிறுவுகிறான்;
அலைமேல் அலையாய்
மலைபோல் வளர அருள்கின்றான்.
72