இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பெண்ணே
முகத்தினில் அருளினைத்
தேக்கிடுவாய் - பெண்ணே
முத்தொளி கூட்டிநீ
வாழ்த்திடுவாய்!
அகத்தினில் அன்பினைத்
தேக்கிடுவாய்-மொழி
அமிழ்தினை ஊற்றெனத்
தந்திடுவாய்.
பண்புக் கெல்லாம் முதல்
ஆகிடுவாய்-இந்தப்
பாருக்கெல்லாம் முதல்
நீயல்லவா?
பெண்மைக் குரியநல்
நாணம்கொள்வாய்-அன்றேல்
பித்தூட்டும் மார்பிலா
மங்கையன்றோ?
77