பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



     பெண்ணே

     முகத்தினில் அருளினைத்
     தேக்கிடுவாய் - பெண்ணே
     முத்தொளி கூட்டிநீ
     வாழ்த்திடுவாய்!

     அகத்தினில் அன்பினைத்
     தேக்கிடுவாய்-மொழி
     அமிழ்தினை ஊற்றெனத்
     தந்திடுவாய்.

     பண்புக் கெல்லாம் முதல்
     ஆகிடுவாய்-இந்தப்
     பாருக்கெல்லாம் முதல்
     நீயல்லவா?

     பெண்மைக் குரியநல்
     நாணம்கொள்வாய்-அன்றேல்
     பித்தூட்டும் மார்பிலா
     மங்கையன்றோ?

77