பெண்மை
ஆண்மை என்னும் யாழில் - இசை
அமிழ்தைப் பொழிவது பெண்மை,
மாண்பைத் தருபவள் அவளே - ஆண்
மானம் காப்பவள் அவளே!
சமுதாயத்தின் ஆற்றல் - உலகச்
சமுதாயத்தின் மேன்மை
சமுதாயத்தின் வாழ்வு - அனைத்தும்
தாங்கி நிற்பது பெண்மை!
வாழ்வின் கமுக்கம் எல்லாம் - நம்மில்
வகைப்படுத்தல் பெண்மை.
வாழ்வின் உணர்ச்சிச் செயல்கள் - பலவும்
வகுத்தளிப்பதும் பெண்மை.
உள்ளம் என்னும் குளத்தில் - நீரின்
உணர்வும் உணர்ச்சியும் பெண்மை.
வெள்ளத்து அலர்ந்த மலர்கள் - தம்
வீர மரபினர் என்பேன்.
கூரிய சீரிய பார்வை - தமைக்
கொண்டவள் நாட்டின் செல்வம்;
ஈரிய நெஞ்சம் உடையாள் - அவளே
எச்செல்வத்தினும் மேலாம்.
ஆண்மை சமுகத் தொருதூண் - அதன்
ஆற்றல் மேன்மைக்குதவும்
தூண் மற்றொன்றுண்டதுவே - வாழ்க்கைத்
துணையாம் பெண்மை, பெண்மை!
78