பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



     மகளே

     மகளே, மகளே, தகவல் இஃதறிக:
     பிறந்தநின் மக்களின் சிறகுகள் நன்கு
     முளைத்து வலுப்பட்டு முற்றிடும் முன்னே,
     கிளைக்கூடு இழந்தனர், கிடைக்கும் அன்பினை
     இழந்தனர், இரையினை இழந்தனர், அந்தோ
     வெகுதொலைவில்போய் விழுந்தழுகின்றனர்.

     அவல நிலைக்கெலாம் அன்புத் தாயே
     உவப்புறும் அக்கறை உன்னிடம் இன்மையே.
     உன்னிடம் எண்ணத்துயர்வுகள் உண்டே,
     அன்னைக் குரிய ஆர்வம் உண்டே,
     நபிமணி அருந்தவச் செல்வி பாத்திமா
     தவத்திற வாழ்க்கையை மறந்துவிடாதே.

     உன்னுடை குருதிக் கிளையிலிருந்து
     தென்புடை வீரன் மின்னேறு இடியெனக்
     குதித்தெழ வேண்டும், குளிர்மலர்க் காவில்
     இளவேனில் நலமெலாம் இங்கு
     வளமுறச் செய்ய வரவேற்கின்றேன்.

80