இறைவனே!
இறைவனே என் மார்புக் கூட்டினுள்
எதையும் அறிந்திடும் நெஞ்சைத் தந்தருள்;
நிறைந்த மதுவில் திளைத்தே நினைவுகள்
நிரம்பும் விழிகளை உவந்தே ஈந்தருள்.
* * * * *
தாவூ தின் ஒளிப் பாட்டின் ஆற்றலால்
தரையின் புழுதியை ஒளிவிளக் காக்குக;
நாவூ றும்சுவை மதுவின் ஒவ்வோர்
அணுவிலும் தீயின் கனலே ஏற்றுக.
* * * * *
என்றன் நாட்டின் மூங்கில் காட்டினில்
இன்இள வேனில் தென்றல் வீசிடும்,
குன்றின் அருவி கூவும் குயிலுடன்
குழலின் இன்னிசைத் தீப்பொறி பேசுக.
* * * * *
நன்செய் புன்செய் நானிலப் பயிர்கள்
நல்ல மாமழை நட்புக் கேங்கிடும்
அன்புற் றார்த்திடும் அனைத்துயிர் கட்கும்
அரிய மழை முத் தணைத்துத் துய்த்திடு.
* * * * *
வெற்றி வேந்தர் வீரவாள் இன்றியும்
வெஞ் சினங்கொள் மறவர் இன்றியும்,
பற்றும் வாளின் துணையிலாது அன்பினால்
பற்பல நாட்டைப் பற்றுதல் ஆண்மையாம்.
93