தன்உ ளத்தினைத் தன்கை ஏந்தியே
தருக்குடன் புற உலகில் காட்டலும்
தன்பழம் உடலில் புத்துணர்வினைத்
தந்து மாந்தனைத் தருக்கச் செய்திடேல்.
* * * * *
அமைதி அற்ற என்றன் நெஞ்சினுள்
அலைகடல் போராட்டம் நீக்குக;
அமைந்த சிக்கலில் மேலும் சிக்கல்
அமைக்க வேண்டுவேன் அறிவு கொளுத்தவே.
நின்னை விழித்தெழச் செய்யவேஅட
நீள இரைந்துநான் அழுது கூவினேன்,
அன்பு, கூச்சலோ ஓசையோ இல்லாது
அமைதி யாகத் தன்கடன் ஆற்றுமே.
* * * * *
கோயில் கோட்டையில் நீண்டகாலமாய்
வாழ்க்கை, துன்பின் அழுகை ஆயிற்றுத்
தோயும் அன்பின் அவை இருந்த நல்
அறிஞன் தோன்றிடும் வரையில் துன்பமே!
* * * * *
மண்ண கம்பல மலைகள் தாங்கினும்
மடியினில் பல இடிகள் வீழினும்
எண்ணிலாச்சுமை நமது நெஞ்சில்வாழ்
இழிவின் எண்ணப் புழுதியை ஆக்கின.
* * * * *
என்றன் உள்ளத்து எழுச்சிக் குன்றினில்
எரிமலைத்தீ ஒன்றை எழுப்பிடு!
நின்று எதிர்க்கும் நக்கீரனைப் போல்
நெருப்புக் குருதி நரம்பை உடையவன்.
94