இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
புதிய நாகரிகத்தின் பொய்மையைப்
பூண்டிலாமலே பொசுக்கி நீக்கிடு;
மதியினில்நினை வெளிச்சம் ஆக்கியே
மனத்த கத்துநீ இறந்து சாய்ந்திடு.
அடிமை எண்ணக் கலைகள் அனைத்தினும்
சாவின் அடிச்சுவடு ஆர்ந்து கூத்திடும்
அடிமைத் தனத்தின் மாய மருட்கைகள்
ஆயிரம்மொழி நாவிற்கு எட்டுமோ?
* * * * *
அடிமை தன்உள் ளுணர்வை அறிவினை
ஐயகோ மிக மலிவாய் ஈகிறான்;
உடலை உயிரோடும் இருத்த எண்ணியே
உள்ளம் தன்னை விற்று விடுகிறான்.
95