பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

வதால் அதிக துன்பம் இருப்பது இல்லை. அது இல்லை என்றால் அவர்கள் அவர்களுக்கே இங்கும் தனிமையாகிவிடுவதிலிருந்து தப்ப முடியாது.

என்றாலும் அங்கு உள்ளது போல அந்தச் சூழ்நிலைகள் அண்மையில் உருவாவதற்கு வாய்ப்பு இல்லை; வராது; வந்தால் அதைத் தடுக்க முடியாது.

முடிவுரை

அங்கே நான் தங்கியது ஐந்து மாதங்கள். வசதியும் மனம் விரும்பும் சூழ்நிலையும் எல்லாம் இருக்கிறது . விருமபி இருந்தால் இன்னும் சில மாதங்கள் இருந்திருக்கலாம். அங்கே தமிழ்நாட்டுத் திரைப்படங்கள் வீடியோக்களில் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். சுமார் ஐம்பது தமிழ்ப் படங்களைப் பார்த்தேன் என்று நினைக்கிறேன், முந்தானை முடிச்சு பலமுறை பார்த்தேன். மண்வாசனை என்னைக் கவர்ந்த படமாக இருந்தது. ரேவதியின் நடிப்பைவிட தோற்றம் என்னைக் கவர்ந்தது; குழைந்து பேசும் இளமை இன்னும் மறக்க முடியலல்லை. ஒரு சிலர் முதற்படத்தில் நம் மனத்தில் பதிந்துவிடுகின்றனர் . தொடர்ந்து அவர்கள் நடிக்கும் படங்களைப் பார்க்கும் போது அந்த உருவம் மங்கிவிடுகிறது. முந்தானை முடிச்சில் ஊர்வசியின் பாத்திரம் மறக்க முடியாத பாத்திரம். அடுத்து வரும் நடிப்புகளில் உருவங்கள் நிற்கவில்லை. சிகப்பு ரோஜாவில் ஸ்ரீதேவி மறக்கமுடியாத பாத்திரம். அதைவிட பதினாறு வயது கவர்ச்சி மிக்க பாத்திரம். மெளலியின் ‘புல்லாங்குழல் ஊதுகிறது’ மிகவும் பிரமாதமாக படம் என்று மதிப்பிட முடிந்தது. மென்மையான நகைச்சுவை; அந்த ஆந்திரப் பெண், அவளின் அருமையான நடிப்பு, மெளலியின் அங்கதம் கலந்த நகைச்சுவை இவை எல்லாம் இன்னும் நான் மறக்க முடியவில்லை.

நான் அங்கு இழந்தவை பல; தமிழ்ப் பத்திரிகைகள்; தமிழ்ப் பேச்சு, தமிழ்நாட்டு அரசியல், என்னால் அதற்கு மேல் அங்கு இருக்க முடியாது. ‘தமிழ்நாடு நான் பிறந்த மண்; உலகத்தில் எந்தப்பகுதி எப்படி இருந்தாலும் நான் தமிழ்க் நாட்டில் வாழ்ந்துவிட்டேன். வாழ்கிறேன்; இங்கே வாழ்ந்து முடிப்பேன்.