பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

இன்னொன்று :

கெடுக்கப்படுகிறவள் ஒரு அழகுக் குமரி. அவள் தலையில் ஒரு குடம் தண்ணீரைக் கொட்டி அவளது கறை படிந்த கற்பைத் தூய்மைப்படுத்துகிறாளாம் அவள் தாய். வினோத மான பண்பாடாகத் தோன்றவில்லையா இது ? இந்தக் கதையைப் படித்துவிட்டு அந்தத் தாய்க்காகக் கண்ணிர் சொரிந்தேன் நான்.

மற்றொரு கதை :

பெண் ஒருத்தி களங்கமடைகிறாள். அவளை ஆதரிக்கத் துணிகிறான். ஒருவன். ஆனால் அவனுடைய மனம், சமையல்காரனின் வாய் வேதாந்தத்தால் மாறி, அந்த அபலையைப் பிடித்து வெளியே தள்ளிவிட்டுக் கதவை தாளிட்டுக் கொண்டு விடுகிறான் அவன். கோழை அவள் !

இவைகளில் ஒன்றாவது வாழ்க்கையைச் சொல் கின்றதா ? ஊஹல்ம் !

கதை, வாழ்க்கையாகவே மாற வேண்டும் !

வாழ்க்கையே கதையாக மாற வேண்டும் !

நான் நாடகக்காரி. ஆனாலும் இன்று இரவு பத்து மணிவரை நான் பண்பும் பண்பாடும் கொண்டவளாகவே ஒழுகி வந்தேன்.

மீண்டும் சொல்கிறேன். நான் நிரபராதி ! இது சத்தியம் !.....ஒரு விண்ணப்பம்,

விதி வசத்தால் என் வயிற்றில் 'கரு' உருப்பெற்றால் அந்த ஒரு முடிவுக்குக் குறுக்காகத் தாங்கள் நிற்கவே கூடாது !

நம்மிடையே புதிரோ பிரச்சனையோ சிக்கலோ எழக் கூடாது. அதற்காகவே இந்த லெட்டர்.

எஸ், ஊர்வசி’