பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

}25

தாங்கினார். எனக்கு நல்ல எதிர்காலம் காத்திருப்பதாகச் சோதிடம் சொல்லப்பட்டது ‘

நான்கு :

! - வாழ்வதற்கே ! நாடகத்தில் வில்லனாக நடிக்கும் பூமிநாதன் அவர்கள் ரொம்பவும் தங்கமானவர் நான் கற்பழிக்கப்படும் கட்டத்தின் ஒத்திகை இன்று நடை பெற்றது. என்னைத் தயவுசெய்து மன்னித்துவிடுங்கள்’ என்று சொல்லிவிட்டு, நாணயத்தோடு ஒத்திகையில் ஈடு பட்டார். பணக்காரப் பிள்ளையானாலும், மிகுந்த அன்புடன் பழகுகிறார் அமைதியான மனிதருக்கு எப்படிப் பட்ட அருவருப்பான பாத்திரம் கிடைத்திருக்கிறது, நாடகத்திலே .பாவம் !’ .

ஐந்து :

காலாடி ஒருவன் கன்னத்தில் எண்ணி இரண்டு அறைகள் கொடுத்தேன் !’

=#fiji :

இன்று அரங்கேற்றப்பட்ட வாழ்வதற்கே நாடகத் தில் எனக்கு நல்ல புகழ் கிடைத்தது.

ஆனால் அப்புகழை அனுபவிக்க வொட்டமல், நான் அபலையாகி விட்டேன், என் கற்பை - பெண்மையைக் களவாடி விட்டான் பாவி அந்தப் பாவியின் பெயரை நான் நீதிதேவன் சந்நி தி யி ல் சொல்லிவிட்டேன் ! நீதி விசாரணையை ஆண்டவன் நடத்தும்வரை நான் பொறுக்க மாட்டேன் ! நானே ஒருநாள் அவ்விசாரணை யை நடத்தியே காட்டுவேன் ! -

கறைபட்ட நிலவுக்கு அடைக்கலம் தந்தார் என்

அன்பர் அம்பலத்தரசன் அவர். என்னுள் தோன்றும் போதெல்லாம் இனம் விளங்காத பாசம் இதுவரை என்னுள் முகிழ்ந்து வந்ததன் தாத்பரியத்தை இன்றிரவு என்னால் உணர் முடிந்தது. எனக்கு நல்வாக்குக் கொடுத்து விட்டார்