பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127


பரவியிருந்த மனிதாபிமானமும் மனிதத்தன்மையும் இந் நிலைக்கு என்றென்றும் கைகொடுக்கும் என்றும் அவன் நம்பினான். இனி எனக்கு ஊர்வசிதான் ஆணை. அவன் இஷ்டம் தான் என் எதிர்கால வாழ்வு!’ என்ற முடிவும் அவனுள் உருப் பெற்றிருந்தது.

‘தன்னைப் பலிகொண்ட நீசனை அவன் ஏன் காட்டிக் கொடுக்க மறுக்கிறாள் ; தன் ைனக் கெடுத்த பாவி எனக்குத் தெரிந்த ஆள்தான் என்று கோடி காட்டியிருந் தாளோ ?எனக்கு நண்பனாக இருக்கும் ஒருவனோ இந்தப் படுபாதகத்தைச் செய்தான் ? எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமென்றே நிர்ணயிக்கக் கூடவில்லையே?

அவன் உள்ளம் தவித்தது.

நிலவுக்கென்று ஒரு கவர்ச்சியா ? இத்தகைய கவர்ச் சிக்கும் தானே களங்கம் வந்துவிடுகிறது ?

அர்த்த புஷ்டி கொண்ட சிந்தனையாக அவனுக்குத் தோன்றியது, இந்நினைவு.

அப்போது, தொலைபேசி அழைப்பொன்று வந்தது. பூமிநாதனை எதிர்பார்த்துக் கொண்டிருந்த அவனிடம் பூ மி நா த ன் அங்கு வந்தானாவென்று விசாரித்தார். பூமிநாதனின் தந்தையான சீமான் சாந்தமூர்த்தி, விவரத் தைச் சுட்டினான். அம்பலத்தரசன். ‘சரி இனிமேல் பூமிநாதனை இங்கு நான் எதிர்நோக்கிக் காத்துக் கொண் டிருப்பது வீண். பணக்காரப் பிள்ளைக்கு ஆயிரம் ஜோலி கள் இருக்கும். ‘டாட்ஜ் கையிலிருக்கையில், தந்தையை ‘டாட்ஜ்’ செய்வதில் வியப்பேது ? ... ஊர்வசி என்னை எதிர்பாத்திருப்பாள், பாவம் !” என்று எண்ணி முடித்துப் புறப்பட்டான், அம்பலத்தரசன். -

அவன் எண்ணத்துக்கு வாய்த்த தூண்டுதலாக, அவனை உடன் எதிர்பார்த்திருப்பதாகத் தொலைபேசி மூலம் தெரிவித்தாள் ஊர்வசி,