பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4


மச்சான் வீரமுத்துவுக்கே வாழ்க்கைப்பட்டு முந்தானை விரிக்கிறதுக்கு ஆயி எ ழு தி ப் போடலையா .. ? ஈரம் நன்றியின் உணர்வில் சிலிர்த்தது; கசிந்தது.

சுகமான ராகமும் வேப்பங்காற்றும் ஒன்று ! காக்கையும் குருவியும் அம்மன் பிரசாதம் வேண்டிக்கூட்டம் சேர்க்க தலைப்படுகின்றன.

சாம்பான் பெருமைப்பட்டார். அவரது மனிதாபி மானம் பெருமிதம் அடைந்தது. அவர் சாமான்யமான புள்ளியா, என்ன ? வாழ்க்கைதடத்தில் கிட்டத்தட்ட எழுபத்தேழு தொலைக் கற்களை மதிப்போடும் மரியாதை யோடும் நிமிர்ந்த தலையை நிமிர்த்தியபடியே தாண்டி விட்ட மானி ஆயிற்றே !

கைநொடிப் பொழுது கழிந்தது.

தலைவாசலிலே, இரையாமல் இறைந்து கிடந்த அத்தனை பொருட்களும் இப்போது உட்பிரகாரத்தில் மடப்பள்ளியை அடுத்திருந்த கிட்டங்கி'யில் இ ட ம் பெற்றன ; இடம் கண்டன. wo

சாம்பான் கிழவருக்கு மூச்சு வாங்கியது. மங்கத்தாக் கிழவிக்கும் மூச்சு இறைத்தது. பெரியவர் அம்மன் சந்நதிக்கு மடங்கினார். மடங்

கியதும், தீயை மிதித்துவிட்ட பாவனையில் திடுக்கிட்டார்; மலைத்தார்; திகைத்தார்; தவித்தார் ! - மூத்தவளே ! நான் கனா-கினா கானுறேனங்காட்டி உள்மனம் ஒல மிட்டது; ஒட்டமாக ஓடி வந்து ஒட்டிநின்ற ஆசைக் கண்ணாட்டியின் இதயக் குமுறலும் அவரது உள்ளத்தில் எதிரொலித்திருக்கலாம் !

அங்கே