பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140


பொருளை, அப்படின்னு நிரூபிக்கத்தான் என்க்கு மனசு துடிச்சது, ஆனால், அதுக்குள்ளே, பேச்சு தடம் மாறிப்

போகையிலே தான் கம்ன்னு நின்னி ட்டேன் ! உங்க விமர்சனத்துக்கு அப்பாலேயும் நீங்க நல்ல நல்ல கருத்துக் களைச் சொன்னிங்க ! ஆனால், இப்படிப்பட்ட பாவி

களையுந்தானே பூமிமாதா பொறுமையோடு தாங்கிக் இட்டு இருக்கிறாள் ? ”

பேசிவிட்டு அவள் சிந்தனை வசப்பட்டாள். அவளது முகத்தின் எழில் மங்கி வந்தது, அவளது முகமாற்றம்உள்ளத்துச் சலனம் காரணமாக ஏறபட்டிருநத முகமாறறம அவனுக்குப் புரிந்தது.

ஊர்வசி. பாவிகளுக்கும் இதயமற்ற மிருகங்களுக்கும் தர்மமும் தெய்வமும் கூலி கொடுக்கமால் தப்பாது ! ஆமா, தண்டனை கொடுக்காமல் தப்பவே முடியாது! மனசாட் சிக்குப்பதில் சொல்லாமல், தெய்வத்துக்கும் தர்ம தேவதைக்கும் பதில் சொல்லாமல் தப்பிடுச்சிடுறவங்களுக்கு நம்மைப்போல் உள்ளவங்கதான் தண்டனை கொடுத்தாக வேணும் ?...” என்று உத்வேகத்தோடு எடுத்துக்காட்டி னான் அம்பலத்தரசன்.
  • *

இப்பேச்சைக் கேட்டதும், அவளது முகச் சலனம் சமன்நிலை அடைந்தது.

‘நம்மைப்போல் உள்ளவங்களாலேதான் ப ா வி களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கவும் முடியும் ! நீங்க சொன்ன .ே பச் சு. நூத்துக்கு நூறு மெய்தானுங்க” என்றாள் ஊர்வசி,

தீவிரமானதொரு வைராக்கியப்பண்பு அ வ ளு ள் கனன்று கொண்டிருந்ததை அவளது குரல் கோடிட்டுக் காட்டியதோ ? பற்களை நறநற வென்று கடித்துக் கொண்டாள். மறுபடியும் சலனம் கோடு கிழித்தது. அவள் வதனக்கிழியில்.