பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150


தோற்றம் கொடுத்ததை அவளது உள்ளுணர்வு எடுத்துக் காட்டியது.

வாழ்க்கை ஒர் உயிர் மரணப் போராட்டமேதான் ! பிறவிச் சோதனையை வெல்ல தியாகப் பண்பும், சுயநல மற்ற தன்மையும், ஈரச் சித்தமும் வேண்டும். இத்தகைய குணச்சீர்கள் மனித மனத்துக்குக் கிட்டிவிட்டால், அப்பால் வாழ்க்கை ஒர் ஆனந்தமயமான ஆறுதலாகவே அமையும்! ஊர்வசியின் எதிர்காலத்தைப் பேண நான் எடுத்துள்ள இப்புதுப் பிறவி எனக்குக் கை கொடுக்கும் , என் மனமே எனக்கு வழிகாட்டியாக அமையும். என் மனத்துக்கு நானும் வழிகாட்டியாக அமையமுடியும் !’

அவன் போர்த்துக்கீசிய மாதா கோவில் தெருவில் திரும்பினான். எனக்குக் கோழி பிரியாணி பிடிக்கு மென்று யார் சொல்லியிருப்பார்கள், ஊர்வசியிடம் ? ஆமாம், மங்கையர்க்கரசிதான் சொல்லியிருக்கக்கூடும் !’ தனக்குத் தானே முறுவல் பூத்தவனாக நடந்தான் அம்பலத்தரசன்.

வானக் கப்பல் சிவப்புப் புள்ளியாக நட்சத்திரங் களுக்கு மத்தியில் பறந்து சென்றது.

ஆங்கிலச் செய்திகள் படிக்கப்பட்ட நேரத்தில், அவன் ஊர்வசியின் குடிவீட்டை அடைந்தான்.

வழிமேல் விழிவைத்து எதிர்பார்த்திருந்தாள் அவள். “வாங்க, அத்தான் !’’

அத்தான் என்ற உறவுச் சொல்லின் புதுமையை அவன் அப்போதும் துல்லிதமாக உணரலானான்.

  • வாங்க சாப்பிடலாம் ‘ என்றாள் மீனாட்சி அம்மாள்.

சொல்லிக்கொண்டே, கூடத்தில் தடுக்கைப் போட்

டாள். சாப்பாட்டுக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் சுறு சுறுப்பாகச் செய்தாள்.