பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16t

எனக்கென நிர்ணயித்த பெண்ணின் போட்டோவும் கிடைத்தன. உங்களது அன்பின் ஆணையை சிரமேற் கொள்ளப் பழகியவன் நான். ஆனால் இப்போது, தெய்வம் எனக்கு ஒரு புது ஆணையைப் பிறப்பித் துள்ளன, அதன் படி அபலைப் பெண் ஒருத்தியை நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். இந்த என்னுடைய முடிவைக் கேட்டால் நீங்கள் என்னை ஆசீர்வதிப்பீர் களென்றே நம்புகிறேன். முகூர்த்தத்துக்கு ஆவணியில் நாள் பார்த்துக் கொண்டு அங்கு வந்து தங்களையும் இங்கு அழைத்துக் கொண்டு வர உத்தேசம். தாங்கள் என்னையும் அந்தப் பெண்-அதாவது உங்கள் மருமகள் ஊர்வசியையும் மனப்பூர்வமாக ஆசீர்வதித்து, எங்கள் கல்யாணத்தை நடத்தி வைக்கும்படி கேட்டுக் கொள் கிறேன்.

தாங்கள் அனுப்பிய புகைப்படத்தை இத்துடன் திருப்பி அனுப்பியிருக்கிறேன். என் பதில் கடிதம் கண்டு அவ்விடத்தில் வாக்குக் கொடுக்க வேண்டும் என்று முன் கடிதத்தில் தாங்கள் குறிப்பிட்டது நல்லதாகப் போயிற்று. மற்றவை நேரில்.

இப்படிக்கு. தங்கள் மைந்தன் ஆ. அம்பலத்தரசன்

பெட்டியைத் திறந்து அந்த நிழற் படத்தை எடுத்து, அதையும் கடிதத் தாளையும் உறைக்குள் இட்டு முகவரி எழுதி ஒட்டிக் கொண்டு தலைமை அஞ்சல் நிலையத்தை நோக்கிப் புறப்ப்ட்டான்.

அவன் இல்லாத வேளையில் பூமிநாதன் அவனைத் தேடிச் சென்ற விவரத்தை அவன் எங்ஙனம் அறிவான்!

இ -11