i 65
அறையில் நுழைந்தான் பூமிநாதன். அவனுடன் இளம் பரிதிக் கதிர்களும் நுழைந்தன. -
- உட்காருங்க” என்று சொல்லிச் சோபாவைக் காட் டினான் அம்பலத்தரசன்.
முகrவரம் செய்திருந்தான் பூமிநாதன், முதுகைச் சாய்த்து அமர்ந்தான். பவுடர் பூசப்பட்டிருந்த மாநிறக் கன்னங்களில் அங்கங்கே மெல்லிய இழைகளாகக் கீறல்கள் இரண்டொன்று லேசாகத் .ெ த ரி ந் த ன. ஃப்யூஜி ஸில்க் சட்டை பளபளத்தது. மைனர் சங்கிலி கழுத்துக்கு வரம் பறுத்திருந்தது. அவன் கழுத்து பத்திரமாகவே இருந்தது.
பூமிநாதனின் மீதிருந்த பார்வையை அழுத்தி விட்ட போது, அவனிடம் நூதன மாறுதல் ஒன்றையும் அம்பலத்தரசன் கவனிக்க வேண்டியவன் ஆனான். ஒஹோ . மீசை புதுசு போலிருக்கு, கனஜோர்ாக இருக் குங்க நாடகத்திற்காக வச்சிருந்த மீசையைச் சாசுவத மாக்கிக்கிட்டீங்க போலே !’’
பூமிநாதன் வெட்கத்தோடு சிரித்தான். வெட்கத்திற் கும் ஆ ண் ைம இருந்தது. ஆண்மைக்கும் வெட்கம் புதிதல்ல!
ஊதுவத்தியைக் கொளுத்தினான் அம்பலத்தரசன்.
“ஸ்மெல் பிரமாதமாயிருக்கே ! பூ மி நாத ன் பாராட்டினான்.
“தன்னை அழிச்சுக்கிட்டு இந்த ஊதுவத்தி நமக்கு வாசனை கொடுக்குது!’
“ஆமாம், அதோட தியாகம் தான் இந்த வாசனைக்குத் தத்துவமாய் அமைஞ்சிருக்குது !”
“இதேதானே வாழ்க்கைக்கும் தத்துவம்'