20
அவன், வேலாயுதம், தன் ஆத்திரம் பூராவையும் அபலை
தெய்வானையின் பேரில் கொட்டிக் கொட்டி அளந்தான்.
கொண்டவன் படி அளந்த லட்சணம் இது!
நினைவுப் பூக்கள் சிதறி முடித்தன!
சாம்பான் பூசாரி சுயப்பிரக்கினை அடையலானார். ஆத்தாளே! நாளைக்கு உனக்குப் பொங்கல் பண்டிகை ; எங்க தெவ்விப் பொண்ணுக்கு, ஒன்னோட தெய்வானைக் குட்டிக்கும் சத்தியமான, நாயமான, தர்மமான ஒரு நல்ல பொங்கல் வைபோகத்தை உண்டாக்கிக் கொடுத்துப்புடு, மூத்தவளே ! ?- ஈரவிழிகளிலே ஈரம் கசிகிறது; கசிந்து கொண்டேயிருக்கிறது !
[4]
இந்தேறலுக்கு மேம்பட்டதாகவும், பூப் போன்ற புலரிப்பொழுது பூவாகவே, மணக்கிறது !
ஊராண்டு உலகாளும் திரிசூலி அங்காளம்மன் பூப் போலச் சிரிக்கிறாள் ; சிரித்துக் கொண்டே இருக்கிறாள் !
தீபங்கள் எரிந்தன.
“பள்ளயம் படைத்த படையலிலே ஊதுவத்தி எரிகிறது.
பறைகள் கொட்டுகின்றன.
கொம்புகள் முழங்குகின்றன.
சேகண்டி ஒலிக்கிறது.
மணி ஓசை மிஞ்சுகிறது.
பூஜை நடக்கிறது.
இபாராதனை முடிகிறது: