பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

நினைவும், நிழலும் தான் பிரதானமாக இருந்து வந்தன. ஏதேதோ சிந்தனையின் சிதறல்கள் அவனது உள் மனத்தை ஆட்டிப் படைக்கத் தொடங்கி நிமிஷங்கள் பல கடந்து விட்ட உண்மையை அவன் அறிந்திராதவனா, என்ன?

அந்தக் கட்டத்தில் உலக உருண்டை எவ்வளவு அந்தரங்கமாகச் சுழல்கிறது !

மேல்விட்டத்தில் சுழன்று கொண்டிருந்த மின் விசிறியின் சன்னமான ஒரு வகைச் சத்தத்தைக் கடந்து, "மிஸ்டர் அம்பலத்தரசன்" என்ற குரல் கேட்கவே அம்பலத்தரசன் திரும்பினான் ; அழைத்த ஆசிரியரின் பக்கமாக நிமிர்ந்தான்.

"உங்க ரெவ்யூ ரொம்பவும் க்ளாஸாக இருக்குறதுங்க.”

“ரொம்ப நன்றிங்க எடிட்டர் ஸார். நாடகமும் க்ளாஸாக இருந்திச்சு. என் விமர்சனமும் அதையொட்டி அமைந்திடுச்சுங்க” என்று வழக்கம்போலவே தன்னடக்க மாகக் கூறினான் அம்பலத்தரசன்.

"மிஸ்டர் அம்பலத்தரசனுக்கு இயல்பாகவே இளகிய மனசு ; கல் மனத்தையும் கரைக்கச் செய்யக்கூடிய நாடகக் கதை அம்பலத்தரசனின் இரக்க நெஞ்சை மேலும் உருக் கியிருக்க வேணும்" என்று குறுக்கிட்டான் பூமிநாதன் - ‘இரட்டைக் குரல்' மாறிவிட்டது.

அப்பேச்சு அம்பலத்தரசனுக்குப் புல்லரிப்பை உண்டு பண்ணியது. அவன் கண்கள் கலங்கின; இதயம் மேலும் நெகிழ்ந்தது இரக்கம் என்பதே ஒரு பெருஞ் சோதனை தான். அத இால்தான் எனக்கென்று இந்தச் சோதனையை விதி ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றதா ? தெய்வமே அந்த அபலை ஊர்வசியைக் காப்பாற்று !.

'ரோட்டரி இயங்கிய சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. இனியும் அவனால் காலந் தாழ்த்த இயலாது. ஆகவே புறப்பட்டான்.