பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

பிராட்வே வந்தது. முச்சந்தியில் வந்து நின்றான். அவன் மம்மல் பொழுது சிறுகச் சிறுக வடியத் தலைப் பட்டது. குளிர்காற்றின் வாடை லேசாக உறவாடியிருந்தது.

தேடி வந்த ஊர்வசியைப் பற்றின ஞாபகம்தான் அவனுக்கு இப்போது கிளர்ந்தெழுந்தது.

“யாருமே வேடதாரியாகவோ, கோழையாகவோ ஆகி விடக்கூடாது!’ என்று சுவாமி விவேகானந்தர் மொழிந்த அருள் வாசகத்தை எண்ணிச் சிந்திக்கச் செய்தவள் ஊர்வசியே அன்றோ ?

தான் கற்பழிக்கப்பட்டவள் என தன்னைத்தானே அறிமுகப்படுத்திக் கொண்ட அவளது வெகுளித்தன்மையும் துணிச்சலும் சேர்ந்து ஒர் அதிசயமான உருவத்தை அவன் முன் சமைத்துக் காண்பித்தது. அந்த உருவத்துக்குச் சொந்தக்காரி ஊர்வசி என்பதும் இவனுக்குப் புரியாத உண்மையல்லவே !

அவள் தன் நிலைமையை எவ்வளவு அப்பட்டமாகத் தெளிவுப்படுத்திக் காட்டிவிட்டாள் ! ஆனால், நான்? தன்னைப் பற்றிய கேள்வியை, தன்னுணர்வை மீறிய ரீதியில் தன் மனச்சாட்சி கேட்டு நிறுத்தியதை அவன் நுணுக்கமாகத் தான் உணர முடிந்தது. தன்னைப் பற்றிய ஆய்வில் அவன் ஈடுபடவேண்டுமென்று அவனது சுயப் பிரக்ஞை கட்டளை பிறப்பித்தது. ஆனால் அக்கட்டளையை அவன் செயற் படுத்த முனைந்தபோதோ அவனது உள்மனம் ஏனோ பின் வாங்கியது. -

அதற்குள், அவனுடைய மனப்புள் வெறொறு கிளைக் குப் பறந்து விட்டது. ‘பாவம், ஊர்வசி ! அவனைக் கெடுத்த அந்தப் பாவி யார் ? அதைப் பற்றி எதுவுமே சொல்ல வில்லையே? ஏன்?..... தன்னை-தன் விலை மதிப்