பக்கம்:இசைத்தமிழ்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i24 குறித்துள்ளார். இக்குறிப்பினைக் கூர்ந்து நோக்குங்கால் முற்காலத்தில் நரம்புக் கருவியாகிய யாழினை நிலைக்கள மாகக் கொண்டே பண்களும் அவற்றின் திறங்களும் ஆராய்ந்து வகைப்படுத்தப் பெற்றன என்பது நன்கு விளங்கும். முற்காலத்தில் வேட்டைத் தொழிலை மேற் கொண்ட மக்கள், அம்புகளை எய்யுங்கால் அவை நெடுந் தூரம் விரைந்து செல்லுதற்கு ஏற்றவண்ணம் வில்லின் கண் நாண இறுகக் கட்டினர். வில் நாணின் இறுக் கத்தைத் தெரிந்து கொள்வதற்கு நாணினை விரலால் தெறித்து அதிலிருந்தெழும் ஓசையை அளவு கருவியாகக் கொண்டனர். வில் நாணின் ஓசையைக் கேட்டு அதன் இசை நுட்பத்தை உணர்ந்த நம் முன்னேர்கள், இசைத் தோற்றத்திற்கு இடஞயுள்ள வில் நாணின் நீளத்தைக் குறைத்துங் கூட்டியும் பலவேறு இன்னிசைச் சுருதிகளைத் தோற்றுவித்தனர். இவ்வாறு வெவ்வேறு இன்னிசைச் சுருதிகளைத் தரும் பல விற்களை ஒன்ருகச் சேர்த்து நெடுங் காலத்திற்கு முன் நம் முன்னேர்களால் அமைத்துக் கொள்ளப்பெற்ற நரப்புக்கருவி வில்யாழ்' என்பதாகும். ஆனிரை மேய்க்கும் ஆயைெருவன் குமிழமரக் கொம்புகளை வில்லாகவளைத்து அதன்கண் மரல் நாரினை நரம்பாகக் கட்டித் தான் அமைத்துக்கொண்ட வில்யாழிலே குறிஞ்சிப் பண்ணை வாசித்தான் என்ற செய்தி பெரும்பாணுற்றுப் படையிற் பேசப் பெற்றுளது. தலைச்சங்க காலத்திற்கு முன் மிகப் பழங்காலத்தில் தோன்றிய வில் யாழினைக் கடைச் சங்கப் புலவராகிய கடியலூர் உருத்திரங் கண்ண ஞர் தம் காலத்தில் ஆனிரை மேய்க்கும் ஆயன் வாசித்த தாகக் கூறியதன் நோக்கம், அக்கருவியின் தொன்மை யினையும் ஆயர் முதலிய யாவரும் கையாளுதற்கேற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/134&oldid=744983" இலிருந்து மீள்விக்கப்பட்டது