பக்கம்:இசைத்தமிழ்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#25 அதன் எளிமையினையும் இனிமையினையும் விளக்குதற் பொருட்டேயாகும். மிகப்பழங்காலத்தில் தோன்றிய வில்யாழ் ஆகிய இக்கருவியை அடிபப்டையாகக்கொண்டேஇசைவளர்ச்சிக்கு இன்றியமையாத பேரியாழ், மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ் என்னும் நால்வகை யாழ்களும், ஆயிரம் நரம்புடைய பெருங்கலம் என்னும் ஆதியாழும் பிறநரம்புக் கருவிகளும் நுண்ணுணர்வுடைய பெருமக்களால் உய்த் துணர்ந்து அமைக்கப்பெற்றன. ஏழிசைகளையும் மெலிவு, சமன், வலிவு என்னும் மூன்று தானங்களிலும் முறையே இசைத்தற்கேற்றவாறு முவேழு (இருபத்தொரு நரம்புகள் கட்டப்பெற்றது பேரியாழாகும். பத்தொன்பது நரம்புகள் கட்டப்பெற்று மகரமீன் உருவாக அமைக்கப் பெற்ற வடி வினையுடையது மகரயாழாகும். மெலிவு நான்கும் சமன் எழும் வலிவு மூன்றும் ஆகப் பதினன்கு நரம்புகளையுடைய தாய்ச் செவிக்கு இன்பம் தரும் இனிய இசையினைத் தோற்றுவிப்பது சகோடயாழ் ஆகும். இதன் பழைய பெயர் செம்முறைக்கேள்வி என்பதாகும். இக்கருவியினை “ஈரேழ் தொடுத்த செம்முறைக் கேள்வி' என இளங்கோவடிகள் வழங்கியிருத்தலால் 'செம்முறைக் கேள்வி என்ற பழைய தமிழ்ப்பெயரே பிற்காலத்தில் சகோஷம் என வடமொழி யில் மொழிபெயர்க்கப் பெற்றுச் சகோடயாழ் எனத் திரிந்து வழங்கியதெனத் தெரிகின்றது. மிகப்பழங்காலத் தில் யாழ்க்கருவியில் மிகவும் வளைவாகச் செய்யப்பட்டிருந்த கோடு' என்னும் உறுப்பானது, நிமிர்ந்து நேராக (செம் மையாக) விளங்கும்படி, சிறிது மாற்றி அமைக்கப்பட்ட யாழ்க்கருவி, செங்கோட்டியாழ்' என வழங்கப்பெற்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/135&oldid=744984" இலிருந்து மீள்விக்கப்பட்டது