பக்கம்:இசைத்தமிழ்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 i சென்னைத் தமிழிசைச் சங்கத்தைச் சிறப்பாகப் போற்றி வருகின்ருர்கள். தமிழ் வளர்ந்த மதுரை மாநகரத்திலும் ஐந்தாண்டுகட்குமுன் தமிழிசைச் சங்கத்தினைத் தோற்று வித்து முத்தையா மன்றம் அமைத்து நாளும் இன்னிசை யால் தமிழ் வளர வழியமைத்துள்ளார்கள். இவ்வாறு சென்னையிலும் மதுரையிலும் அமைந்துள்ள தமிழிசைச் சங்கங்கள் பண்டைத் தமிழர் நுண்ணிதிற் கண்டுணர்த்திய பண்ணும் திறமுமாகிய இசைநலங்கள் உலகெலாம் பரவ நல்லிசைப் பணிபுரிந்து நீடுநின்று பலகிளைகளுடன் தழைத்து வளர்கவென ஏழிசையாய் இசைப்பயணுய் விளங்கும் இறைவன் திருவடிகனை இறைஞ்சிப் போற்றுதல் நமது கடமையாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/211&oldid=745068" இலிருந்து மீள்விக்கப்பட்டது