இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
காதல் பகுதி பூக்காரி சேர்த்துக் கட்டிய முல்லை வேண்டுமென்றேன்-நல்ல சேயிழை அவள் சிரிப்பு முல்லை தந்தாள்! பார்த்துப் பறித்த தாமரைப்பூத் தீர்த்து விலைக்குக் கொடடி. என்றேன் பூத்தமுகத் தாமரையால் புதுமை காட்டி மயங்கி நின்றாள் தேவை யடிதாமரை இதழ் என்றேன் தேனொழுகும் வாயிதழ் மலர்கின்றாள்- ஒரு பூவைக் காட்டிப் பேர் சொல் என்றேன் பூவை "என் பேர் பூவை" என்றாள் ஆவல் அற்றவன் போல் நடந்தேன் அவள் விழிதனில் அலரி கண்டேன் காவல் மீறிக் கடைக்கு வந்துவிழுந்து பலர் கண்பட வாடிய மருக்கொழுந்து நீ மேவா தடி என்று சொன்னேன் வேங்கையில் ஈ மொய்க்கா தென்றாள் தேவைக்கு மணம் வேண்டும் என்றேன் திருமணம் என்று தழுவி நின்றாள் 13 சேர்த்து... சேர்த்து... சேர்த்து...