பக்கம்:இசையமுது 1, 1984.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 குறவர் காடைக் காரக் குறவன் வந்து பாடப் பாடக் குறத்தி தான் கூடக் கூடப் பாடி ஆடிக் குலுங்கக் குலுங்கச் சிரித்தனன் சாடச் சாட ஒருபுறப் பறை தகதக வென் றாடினாள் போடப் போடப் புதுப்புதுக் கை புதுப்புதுக்கண் காட்டினாள். ஓடிச் சென்று மயிலைப் போல ஒதுங்கி நிலையில் நிமிர்ந்துமே மூடி மலர்க்கை திறந்து வாங்கி முறிப்பும் முத்தமும் குறித்தனள். தேடத் தேடக் கிடைப்ப துண்டோ சிறுத்த இடுப்பில் நொடிப்புகள் ஈடுபட்டது நேரில் முத்தமிழ் ஏழை மக்களின் வாழ்விலே! இசைய்முது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_1,_1984.pdf/15&oldid=1443330" இலிருந்து மீள்விக்கப்பட்டது