பக்கம்:இசையமுது 1, 1984.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 சிளம் சினத்தை யடக்குதல் வேண்டும், சினம் உனக்கே கெடுதியைத் தூண்டும்! கினத்தினை யடக்கிட முடியுமா? என்று செப்புகின்றாய் எனில் கேள் இதை நன்று! வலிவுள்ளவன் என்று கண்டு-சினம் வாராமலே யடக்கல் உண்டு; வலிவிலான்மேல் அன்புகொண்டு- அதை மாற்றாதான் பெரிய மண்டு! நலியும் மொழிகளைப் பேசவும் சொல்லும் நாக்கையும் பல்லால் நறுக்கவும் சொல்லும் சினத்தை யடக்குதல் வேண்டும்! இசையமுது அடங்கா வெகுளிமண் மேலே.-காட் டாறுபோய்ச் சிதறுதல் போலே, தொடர்ந்தின்னல் செய்யுமத னாலே-அதைத் தோன்றாமலே செய்உன் பாலே! கடிதில் சுடுமிரும்பைத் தூக்கவும் வைக்கும் கண்ணாடி மேசையைத் தூளாய் உடைக்கும் சினத்தை யடக்குதல் வேண்டும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_1,_1984.pdf/25&oldid=1443340" இலிருந்து மீள்விக்கப்பட்டது