பக்கம்:இசையமுது 1, 1984.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர் பகுதி கறவை நிறையப் பால் தரும் கறவை-- நீ மறவேல் அதன் உறவை! குறைவிலாது வைத் திடுக தீனியைக் குளிப் பாட்டிவா நாளும் மேனியை! நிறையப் பால் தரும் கறவை! நோய் மிகுத்து மாளும்-கொட்டில் தூய்மைசெய் எந்நாளும்! தோய்வு குப்பை கூளம்-இன்றித் துடைக்க ஏன் ஒக்காளம்? வாய் மணக்கவே, உடல் மணக்கவே, வட்டில் நெய்யோடு கட்டித் தயிர்ஏடு நிறையப் பால்தரும் கறவை; ஈக்கள் மொய்த்தல் தீது!-கூடவே எருமை கட்டொ ணாது மேய்க்கப் போகும் போது-மேய்ப்போன் விடுக பசும்புல் மீது! நோக்கும் கன்றினும், நமது நன்மையைக் காக்கும் தாயடா! காக்கும் தாயடா! நிறையப் பால் தரும் கறவை! 27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_1,_1984.pdf/28&oldid=1443343" இலிருந்து மீள்விக்கப்பட்டது