பக்கம்:இசையமுது 1, 1984.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 நாய் என்றன் நாயின் பேர் அப்பாய்! அட முன்றில் காக்கும் சிப்பாய்! இசையமுது ஒன்றும் செய்யாது விளையாடும்; பெருச்சாளியைக் கொன்று போடும்; குலைக்கும் எதிராளியை! என்றன் நாயின் பேர் அப்பாய்... அதன் இனத்தை அதுவே பகைக்கும்!-எனில் அதுதான் மிகவும் கெட்டவழக்கம்!-அது முதல் வளர்த்தவன் போ என்றாலும் போகாது; மூன்றாண் டாயினும் செய்த நன்றி மறவாது என்றன் நாயின் பேர் அப்பாய்... நாய் எனக்கு நல்லதோர் நண்பன்-அது நான் அளித்ததை அன்புடன் உண்ணும்-என் வாய் அசைந்திடில் முன்னின்றே தன் வாலாட்டும் வருத்தினாலும் முன்செய்த நன்றி பாராட்டும் என்றன் நாயின் பேர் அப்பாய்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_1,_1984.pdf/31&oldid=1443356" இலிருந்து மீள்விக்கப்பட்டது