பக்கம்:இசையமுது 1, 1984.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர் பகுதி புகைச் சுருட்டு புகைச் சுருட்டால் இளமை பறிபோகும் பொல்லாங் குண்டாகும் புகைச் கருட்டால்... முகமும் உதடும் கரிந்துபோகும் முறுக்கு மீசையும் எரிந்துபோகும். புகைச் சுருட்டால்... மூச்சுக் கருவிகள் முற்றும் நோய் ஏறும்-பிள்ளை முத்தம் தருநேரத்தில் வாய் நாறும் ஓய்ச்சல் ஒழிவில் லாதிருமல் சீறும்-நல் ஊரோ உன்னைச் சீ என்றே கூறும் பேச்சுக் கிடையில் பிடிக்கச் சொல்லும் பெரியார் நெஞ்சம் துடிக்கச் சொல்லும் புகைச் சுருட்டால்... காகபணத்தால் தீச்செயலை வாங்கிப்-பிள் கைவிட எண்ணினும் முடியாமல் ஏங்கி ஏசிக்கொண்டே விரலிடையில் தாங்கி-நீ எரிமலை ஆகா திருதுன்பம் நீங்கி மாசில்லாத செந்தமிழ் நாடு வறுமை நோய்பெற ஏன் இக்கேடு? புகைச் சுருட்டால்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_1,_1984.pdf/34&oldid=1443355" இலிருந்து மீள்விக்கப்பட்டது