பக்கம்:இசையமுது 2, 1952.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இரண்டாம் பகுதி திருமண வாழ்த்து 5 ஒருமன தாயினர் தோழி இந்தத் திருமண மக்கள் என்றும் வாழி ! பெருமன தாகி இல்லறம் காக்கவும் பேறெனப் படும்பதினாறையும் சேர்க்கவும் ஒருமன தாயினர் தோழி ! மருமலர்த் தார்புனை மார்ப னோடும் மழைபோற் கூந்தல் அழகன்னப் பேடும் வருவார்என அந்தப் பஞ்சணை தேடும் வந்து வரைவார் இன்ப இலக்கிய ஏடும்! ஒருமன தாயினர் தோழி ! இந்தநாள் போலே எந்தநூற் றாண்டும் இன்பம் எனவே ஒவ்வோர் இமைப்போதும் தாண்டும்! செந்தமிழ் நாட்டிடைத் தொண்டுகள் யாண்டும் செயத்தக்க மக்களை இவர்பெற வேண்டும். ஒருமன தாயினர் தோழி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_2,_1952.pdf/14&oldid=1498495" இலிருந்து மீள்விக்கப்பட்டது