பக்கம்:இசையமுது 2, 1952.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இரண்டாம் பகுதி ஏந்திழை 15 எடுப்பு இன்பம் இன்பம் அடடா- அவ் வேந்திழையைக் காணுந்தோறும் உடனேடுப்பு அன்னம் நடக்கும் நடையும் - அருகே அன்னாள் அழகிய நடையும் அடி வஞ்சிக் கொடியும் அசையும்- அருகே மங்கை சிற்றிடை அசையும் நெஞ்சந் தன்னில் அதுதான்- காதல் நெருப்பை இட்டுப் பிசையும் (இ) கோவைக் கனியும் சிவக்கும்—அருகே கோதை இதழும் சிவக்கும் யாவும் அவளுக் கீவேன்- எனநான் எண்ணிடும் எண்ணம் உவக்கும் (இ) பச்சைக் கிளியும் கொஞ்சும் அருகே பாவையின் உதடும் கொஞ்சும் மெச்சும் போதே அடடா- மங்கை மீதினில் மையல் மிஞ்சும் (இ)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_2,_1952.pdf/24&oldid=1499408" இலிருந்து மீள்விக்கப்பட்டது