பக்கம்:இட்ட சாவம் முட்டியது.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

— 8 -—

உலகப் பெரும் ஊழலை மறைப்பதற்காகவும், இந்தியாவில் பார்ப்பனத் தலைமையை நிலைப்படுத்திக் கொள்வதற்காகவும், இங்குள்ள பார்ப்பனத் தலைவர்களும், இந்திரா பேராய அரசியல் தலைவர்களும் கையாண்ட தந்திர உத்திகளே ஆகும்.

இராசீவைக் குண்டு வெடித்து அழிவுறச் செய்தவர்கள், இவ்வகையில் மிகப் பெரும் அறிவாளிகளும், ஈகிகளும், மக்கள் நலம் கருதியவர்களுமே ஆவர். இல்லெனில், இந்தியாவில் வேறு எவருக்குமே இல்லாத அளவில் ஓர் ஆண்டுக்கு உருவா இருபது கோடிச் செலவில் பாதுகாப்பு வளையத்திற்குள் வாழ்ந்த இம் மிகப்பெரும் ஊழல் மன்னனைத் தன்னலப் பித்தனை, வேறெவரும் வேறெவ் வகையிலும் முடிவுறும்படி செய்திருக்கவே இயலாது.


இந்திய அரசின் இழிதன்மைகளும்,
ஆரவாரங்களும் ஊழல்களும்:

இந்திய அரசியலைப் பொறுத்த வரையில், ஆட்சி அதிகார நிலையில் ஏற்பட்டிருக்கும் கையூட்டு, கொள்ளையடிப்பு, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், ஆட்சித் தலைமை, அதிகாரத் தலைமை ஆகியவை மக்களை விட்டு விலகி இயங்குவது, செருக்கும் தன்மூப்பும் கொண்ட வல்லதிகாரப் போக்கு, அறிஞர்களை மதியாத நிலைமை, அரசுப் பணங்களில் ஆட்சியதிகாரத்தில் உள்ளவர்கள் துணிந்து கை வைப்பது, அவற்றைக் கையாடுவது, ஆடம்பர ஆரவாரத்தனமாக அதிகாரத்தில் உள்ளவர்கள் வாழ்வது, தங்கள் சொந்தப் பாதுகாப்புக்கென அரசுப் பணத்தைப் பெரும் அளவில் செலவழிப்பது, மக்கள் வரிப்பணத்தைத் தங்கள் சொந்தப் பணமாகக் கருதி ஊர் உலா, உலக உலா வருவது, தங்கள் சொந்தச் சாய்காலையும் பெருமையையும் புகழையும், உலக நாடுகளிடம் ஒரு போலி மதிப்பையும் தேடிக் கொள்ள, ஏழைமை நாடாக உள்ள இந்தியாவில்