பக்கம்:இட்ட சாவம் முட்டியது.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

— 15 —

வித்திடப் பெற்றது. அவரின் மகளான இந்திராவின் காலத்தில் அவற்றிற்கு எருவும் நீரும் இடப்பெற்றன. இராசீவ் காலத்திலோ அவை செடியாகி மரமாக வளர்க்கப் பெற்றன. இராசீவ் தொடர்ந்து அதிகாரத்தில் இருக்க விடப் பெற்றிருந்தால், அந்நச்சு மரங்கள் காய்த்தும் பழுத்தும் அவர் இனத்திற்குப் பயனும், பிற இனங்களுக்கு அழிவும் நேர்ந்திருக்கும் என்பதில் ஐயமே இல்லை

இராசீவைப் பற்றி உயர்வாக எண்ணி இறுமாந்து கொண்டுள்ளவர்கள், நம் 'தமிழ் நிலம்' இதழின் 147ஆம் எண்ணுள்ள வெளியீட்டில் உள்ள இராசீவ் என்னும் கைதேர்ந்த அரசியல் நடிகனின் உள்ளும் புறமும் என்னும் கட்டுரையை ஊன்றிப் படித்து உண்மையை உணர வேண்டுகிறோம்.


இராசீவால் ஏற்பட்ட இலங்கைத் தமிழின அழிவுகள்:


இவர், தமிழீழ விடுதலைப் போரில் குறுக்கீடாக நடந்து கொண்ட அடாவடித்தனங்களும், தமிழின அழிப்பு முயற்சிகளும் தமிழின மக்கள் இவ்வுலகில் உள்ளவரை நினைவில் இருத்தி வைத்துக் கொள்ள வேண்டிய நிகழ்ச்சிகளாகும். 1987-ஆம் ஆண்டு இறுதியில் அவர் சிங்கள அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தமும், அவர்களுக்குத் துணையாகவும், விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும், இந்திய அமைதிகாக்கும் படை (Indian Peace Keeping Force) என்னும் பெயரில் இவர் முதன்முதல் யாழ்ப்பாணத்தில் இறக்கிய 28,000 இந்தியப்படை வீரர்களும், அவர்களுக்குப் பின்னர் படிப்படியாக அனுப்பிய ஏறத்தாழ ஒன்றரை இலக்கம் படைவீரர்களும், ஈழத்தில் தமிழினத்திற்குச் செய்த பேரழிவுகளையும் இழிவுகளையும் இவ்வுலகம் அழியும் வரை தமிழினம் மறந்துவிட இயலாது. இலங்கையிலிருந்த ஏறத்தாழ 2 இலக்கம் இந்தியப் படைகளுக்காக ஆண்டுக்கு 15 ஆயிரம் கோடி உருவாவை இராசீவ் செலவழித்தார்.