பக்கம்:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6


யைத் துடைக்க அண்ணா அவர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் காங்கிரஸ் ஆட்சி மீது வழக்குத் தொடுத்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிரதம நீதிபதி ராஜமன்னார், பஞ்சாபகேச சாஸ்திரி, சந்திரா ரெட்டி ஆகியவர்கள் 4-11-1949-ல் தீர்ப்பளித்துள்ளனர். அறிஞர் அண்ணாதுரை கட்டுரைகளில் குற்றமில்லை என்றும், ரூபாய் 3000 ஜாமீன் தொகையாகச் சென்னை காங்கிரஸ் ஆட்சி கேட்டது முறையல்ல என்றும் தீர்ப்பளித்தன.

விசாரணையின் போது, ஆட்சியாளர் சார்பில் வாதித்த அட்வகேட் ஜெனரலை நோக்கி, நீதிபதி பஞ்சாப் கேச சாஸ்திரி 'அந்த நாள் பார்ப்பனீயத்தை புகுத்தியவர்களைக் கண்டித்தால் இந்தநாள் பார்ப்பனர்களுக்குக் கோபம் வருவானேன்? என்று ஆணித்தரமாகக் கூட கேட்டுள்ளார். இதற்கு - மௌனம் தான் சர்க்கார் வக்கீலின் பதில்.

எந்தக் கட்டுரைகளுக்காக ரூபாய் 3000 ஜாமீன் கட்ட வேண்டு மென்று காங்கிரஸ் ஆட்சி கேட்டதோ, அந்த இரு கட்டுரைகளையும், 'குற்றமில்லை -- ஜாமீன் கேட்டது தவறு" - 'என்று கூறப்பட்ட நீதிபதிகளின் தீர்ப்பின் சுருக்கமும் சிறுநூல் வடிவாகத் தரப்படுகிறது. கட்டுரைகளில் ஆட்சேபகரமானவை இவை இவை என்று காங்கிரஸ் ஆட்சி சுட்டிக்காட்டி இருந்த பகுதிகளுக்கெல்லாம் நட்சத்திரக் குறியிட்டுப் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

ஜாமீன் தொகை ரூ. 3000மாக- இருக்கவே, அதே தொகையை இச்சிறு நாலுக்குப் பெயராகச் சூட்டப்பட்டுள்ளது.

இது ஓர் வரலாற்று ஏடு

பார்ப்பனீய வாழ்க்கை முறையைக் கண்டித்ததற்கே, காங்கிரஸ் ஆட்சி 'திராவிடநாடு' இதழுக்கு ரூபாய் 3000