பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/436

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாபெரும் உண்மையான கலையை, வெகுஜனங்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதே உங்களது புனிதப் பணியாகும், ., பிரதேசக் கலைத்துறை நிர்வாகம், இந்த நாடக அரங்கின் முக்கியத்துவத்தைக் குறித்து மதிப்பிட்டு வருகிறது என்பது தெளிவு . கலைத்துறை டைரக்டர்களை அடிக்கடி மாற்றுவது நாடகக் குழுவின் வேலைத் தரத்தின்மீது பாதகமான விளைவையே ஏற்படுத்தும். இங்கேயே' பல ஆண்டுகள் தங்கி உழைக்கத் தயாராகவுள்ள ஒரு கலைத்துறை டைரக்டரை, உண்மையிலேயே திறமை படைத்த' நாடக அரங்கொன்றைக் கட்டியமைக்கும் பணிக்காகத் தமது விஷயஞானம் மற்றும் திறமைகள் அனைத்தையும் மகிழ்ச்சியோடு ஈடுபடுத்தக் கூடிய ஒரு நபரை, நாடகக் - குழுவை நேசிக்கவும், அதனை விட்டுப் பிரிந்து போவதை வெறுக்கவும் கூடிய ஒரு நபரை, நிர்வாகம் நியமிப் பதற்கான தருணம் வந்து விட்டது. நமது வெஷென்ஸ்காயாவில் ஏற்றி வைக்கப்பட்டுள்ள பிரகாசமான சிறிய கலைச் சுடர், நமது பிரதேசத்தைச் சேர்ந்த வட்டாரக் கேந்திரங்களுக்கும் விரைவில் பரவும் என்று நான் நிச்சயமாகக் கருதுகிறேன். மேலும் கலையானது வெகுஜனங் களின் மத்தியில் மேலும் மேலும் ஆழமாக ஊடுருவிப் பாயும், வெஷென்ஸ்காயா நாடக அரங்கு நமது நம்பிக்கைகளை மெய்ப்பிக்கும்; அது சோஷலிச எதார்த்தவாதத்தின் நாடக அரங்காக, உயர்தரமான நாடகங்களைத் தயாரிக்கும் நாடக அரங்காக மாறும், பொதுஜனங்கள் மத்தியில் மேலும் மிகுந்த பிரபலத்தை எய்தும் விதத்தில் நமது நாடக அரங்கின் பணி சிறந்தோங் கட்டும் என்று நாம் வாழ்த்துவோமாக! , 1939 - உங்கள் விசுவாசமிக்க துணைவன் 'மனிதகுலத்தின் .. அருமையான . புத்திரர்கள், உலகில் எங்கணும் உழைக்கும் மக்களுக்கு மகிழ்ச்சி கிட்டுவதற்காகப் போராடி வந்த, தற்போதும் போராடி வருகின்ற மனிதர்கள், பிள்ளைப் பிராயத்திலிருந்தே புத்தகங்களில் ஆழ்ந்த அக்கறை காட்டி, வந்தனர்; 'வாழ்க்கையைப் பற்றிய தமது ஞானத்தைப் புத்தகங்களின் மூலம் வளப்படுத்திக் கொண்டனர். - விசித்திரமான, இன்னும் மர்மமாகவும் உள்ள எழுத்துக்களை ஒன்று கூட்டி, தனது மனத்துக்குப் புரியக்கூடிய வார்த்தைகளை உருவாக்க முயலும் முதல் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஒரு "ப்படுத்து பற்றி.. ஆழ்ந்.