பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்ட உயரமான கோலாக்கான யாகோவ் ஜெம் வியாசோவ் தான் முதலில் பேசினார்: நானே ஒரு பீரங்கிப் படை வீரனாக, செஞ்சேனைக் கொரில்லாப் படை வீரனாக இருந்தவன்தான். நான் உள் நாட்டுப்போர் முழுவதிலும் போரிட்டேன். என் மகனும் என்னைப்போலவே ஒரு பீரங்கிப் படை வீரன் தான் , அவன் செஞ்சேனை அணிக ளில் பணி புரிந்து வருகிறான். அவன் பின்னிஷ் போரில் போரிட்டான்; காயமடைந்தான்; இப்போது அவன் ஜெர்மன் நாஜிகளை எதிர்த்துப் போராடி வருகிறான்.. என்னால் ஜெர்மானியரின் துரோகத்தைச் சகித்துக் கொள்ள முடிய வில்லை. எனவே என்னையும் செஞ்சேனையில் ஒரு தொண்டர் படை வீரனாகச் சேர்த்துக் கொள்ளுமாறும், இருபது ஆண்டுகளுக்கு பான்னால் அந்த வெள்ளை வேசி மகன்களுக்கு நாங்கள் செம்மையாக உதை கொடுத்ததைப் போலவே, நாஜி வேசி மகன்களுக்கும் உதை கொடுக்கக் கூடிய விதத்தில், என்னை என் மக னது யூனிட்டிலேயே சேர்க்குமாறும் கோரி அவர்களிடம் நான் எனது மனுவைக் கொடுத்தேன். நான் ஒரு கம்யூனிஸ்டாகப் போர்க்களம் புக விரும்புகிறேன். என்னை - ஒரு பரீட்சார்த்த உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளுமாறு கட்சி ஸ்தாபனத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். தமது முறை வந்தபோது முதிய ஆலைத் தொழிலாளியான பிராவதெங்கோ இவ்வாறு கூறினார்: செஞ்சேனையில் என் புதல்வர்கள் இருவர் இருக்கிறார்கள். ஒருவன் விமானப் படையில் இருக்கிறான்'; மற்றொருவன் காலாட்.. படையில் இருக்கிறான். வானத்திலும் சரி அல்லது நிலத்திலும் சரி, எதிரிகளில் எவருமே மிஞ்சி நிற்காத வரையில், எதிரியை ஈவிரக்கமற்றுக் கொன்று தள்ளுவதற்கு நான் அவர்களுக்குத் தந்தையின் ஆசீர்வாதத்தை வழங்கியிருக்கிறேன். மேலும் அவர் களுக்கு உதவி தேவைப் படுமானால், நானும் துப்பாக்கியை -ஏந்தி, முந்திய காலத்தில் செய்ததுபோல் பகைவர்களை நானே தாக்கிக் கொல்லுவேன். . பச்சைப் பசேலென்று கனத்துத் தடித்திருந்த மாரிக்காலக் , கோதுமைப் பயிர்கள், இளம் மூங்கில் கட்டு வரிசையைப்போல் - உயரமாக, ஒரு சுவராக எழுந்து நின்றன. ரை தா னியப்பயிர் ஒரு சாதாரண மனிதனைக் காட்டிலும் உயரமாக இருந்தது. அதன் விறைப்பான நீலம்பாய்ந்த தாளிதழ்கள், அவற்றின் கனத்தினாலேயே கீழ்நோக்கி இழுக்கப்பட்டு, காற்றில் பலமாக

ஆடிக்கொண்டிருந்தன. -

49