பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குண்டுகள் ஆகியவற்றினால் ஏற்பட்ட அலங்கோலமான துளைகளை , வடுக்களைப்போல் தாங்கியிருந்தது. அந்தத் துளைகளுக்கு ஓர் ! அளவே இல்ல. இறந்தவர்கள் இன்னும் புதைக்கப்படவில்லை; : நாங்கள் மேலும் மேலும் அதிகமான அளவில் இறந்துபட்ட மனிதர்களையும், இறந்து கிடந்த குதிரைகளையும் கண்டோம், : அழுகி நாறும் நாற்றம் மேலும் மேலும் அடிக்கடி எங்கள் மூச்சைப் பிடித்துக் கொள்ளச் செய்தது. ரோட்டுக்கு அருகி; லேயே கருஞ்சிவப்பு நிறப் பெட்டைக் குதிரையொன்றின்" வீங்கிப் போன சடலம் கிடந்தது; இறந்து போன அந்தத் தாய்க்குப் பக்கத்தில், இறந்துபோன சின்னஞ் சிறிய கு திரைக் குட்டி, குஞ்சம் போன்று அடர்த்தியான தனது வாலை அமைதியாகப் பின்பக்கம் வீசிப் போட்ட நிலையில் கிடந்தது , இறந்து போனா அந்தச் சின்னஞ் சிறிய குதிரைக் குட்டி, அந்தப் பெரிய போர்க் களத்தில், வருத்தம் தரத்தக்க விதத்தில் அத்தனை அ நாவசியம் - மான் ஒரு பொருளாகக் காட்சியளித்தது. சரிலின் மீது ஜெர்மானியர்கள் அமைத்திருந்த பதுங்கு குழி தளும், நிலவறைகளும் நமது குண்டுகளால் உழுது போடப் பட்டிருந்தன, பிளவுண்ட மரக்கட்டைகள் தரைக்குள்ளிருந்து வெளியே துருத்திக் கொண்டிருந்தன; jib>கப்பிடிச் சுவர்களுக்கும் பக்கத்தில், உபயோகிக்கப்பட்ட தோட்டாக்களும், காலி!!ான உணவுப் பொருள் டப்பாக்களும், தலைக்கவசங்க கரும், ஜெர் மானியர்களின் பச்சை கபில நிற யூனிபாரம் உடைகளின் தாறுமாறான கிழிசல்களும், நொறுக்கப்பட்ட ஆயுதங்களின் துண்டு துக்காணிகளும், சிக்கல்' முக்கலாகத் திருகி முறுகிப் போய்விட்ட தந்திக் கம்பிகளும் சிதறிக் கிடந்தன, ஒரு நேரடித் தாக்குதல் ஓர் எந்திரத் துப்பாக்கிப் படைவீரர் கோஷ்டியை அந்த எந்திரத் துப்பாக்கியோடு சேர்த்துத் தகர்த்தெறிந்திருந்தது, பதுங்கு குழிகளிலிருந்து சற்றுத் தூரத் தில் இருந்த தானியப் பண்டகசாலையின் வாசலருகே முடமாகிப் போன ஒரு டாங்கி-எதிர்ப்புப் பீரங்கியைக் காணமுடிந்தது; அந்தக் காட்சி சோவியத் பீரங்கிப் பிரயோக நெருப்புச் சூறாவளியினால் ஏற்பட்ட நாசத்தின் இந்தப் படங்கர மான காட்சிக்கு முத்தாய்ப்பாக விளங்கியது, எந்தக் கிராமத்துக்காக அங்கு பல நாட்களாக இந்தப் போர் நடந்ததோ, அந்தக் கிராமம் குன்றின் .மறுபக்கத்தில் இருந்தது . அதனைக் கைவிடுவதற்கு முன் னால், ஜெர்மானியர்கள் அங்கிருந்த வீடுகள் அனைத்துக்கும் தீ வைத்து விட்டனர். நமது ஸாப்பர் வீரர்கள் அப்போது அந்தக் குன்றின் அடிவாரத்திலுள்ள

சிற்றாற்றின்மீது ஒரு பாலத்தைக் கட்டியமைத்துக் கொண்டிருந்

68