பக்கம்:இதயத்தைத் தந்திடு அண்ணா.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாரேனும் பகர்ந்ததுண்டா? பதினெட்டு ஆண்டுக்குள் ஓர் இயக்கம் பதுங்கிப் பாயும் வேங்கையெனப் - பாராள வந்த கதை? ஈராண்டு முடியவில்லை என் அண்ணா ஆட்சியேற்று சீரார்ந்த செயல் பலவும் செய்கலுற்றார்! ஏரார்ந்த உழவர்க்கெல்லாம் ஏற்றம் தந்து எழில் வாழ்வு குவிப்பதற்கு எடுத்தார் முயற்சி! உலகத் தமிழ் மாநாடு துவக்க வந்த ஓங்கு புகழ்க் குடியரசுத் தலைவரவர் இணையற்ற காட்சி கண்டேன் மாட்சி கண்டேன் இதுபோல வாழ்வில் என்றும் கண்டதில்லை'யென ஊர் மெச்சப் புகழ்ந்துரைத்தார் அண்ணன் கீர்த்தி! ஆந்திரத்துப் பிரம்மானந்த ரெட்டிகாரும் ஆகா - நீர் தானே அசல் காந்திய வாதியென்று ஆராதனை செய்திட்டார் - ஆண்டொன்று கழியவில்லை! மதுவிலக்கைத் தீவிரமாய் ஆக்குகின்றீர் பல மாநிலத்தில் கை கழுவிக் கலயம் கட்டிவிட்டார் மரங்களிலே! மகாத்மாவின் தோன்றல் நீர்தான் என்று கிரியென்றால் மலையன்றோ - அந்த மலைதழுவும் முகிலானார் நம் அண்ணா! வி.வி. கிரி தந்த வாழ்த்துக்கு விளக்கமிது. பன்னாட்டுப் பேரறிஞர் வாழ்த்தி நின்றார் - அன்று தென்னாட்டுச் சிகரமாக இருந்திட்டோர் அண்ணன் பற்றி என்ன சொன்னார்? 18