உணர்ச்சி
27
கிறானோ அதுபோலேனும் நீ கருதாதே. ஆனால், அது உண்மையில் எவ்விதம் இருக்குமோ அவ்விதமே நீ அதைப்பற்றிக் கருதுவாய்.
17
எப்பொழுதும் உன் வாழ்வில் வழிகாட்டிகளாக இந்த இரண்டு விதிகளைத் தயாராய் வைத்திரு- ஒன்று, உன்னை ஆள்வதும் உனக்கு உத்திரவு இடுவதுமான உன் மெய்யறிவு கூறுவதையே செய்வது.-மற்றொன்று, யாரேனும் உன் அபிப்பிராயம் தவறு என்று சொல்லித் திருத்தினால் உன் அபிப்பிராயத்தை மாற்றிக்கொள்வது. ஆனால், அபிப்பிராயத்தை மாற்றுவதால் சுகம் வரும் என்றோ புகழ் கிடைக்கும் என்றோ கருதாமல், நியாயமானது, பொது நன்மைக் கேற்றது என்று கருதியே அபிப்பிராயத்தை மாற்றிக்கொள்.
18
பதினாயிர வருஷகாலம் உயிரோடிருக்கப் போவதாக எண்ணி நடவாதே. மரணம் உனக்காக எப்பொழுதும் காத்துக்கொண்டிருக்கிறது. உடலில் உயிருள்ள பொழுதே நல்வினை செய். உயிர் போனபிறகு உனக்கு எதும் செய்யச் சாத்தியமிராது.
19
பிறர் நினைப்பதையும், சொல்வதையும், செய்வதையும் கருதாமல், தான் செய்வது நீதியும் நெறியும் பொருந்தியதா என்று மட்டும் கருதுபவனை விட்டகலும் துன்பங்கள் பல. பிறர் துன்மார்க்கத்தை லட்சியம்