34
இதய
ஒரு காரியத்தைச் செய்து முடிப்பது உனக்குக் கஷ்டமாயிருந்தால் அது அசாத்தியமென்று நினைத்து விடாதே. மனிதனால் செய்யக்கூடிய, மனித இயல்பிற்கு ஒத்த எதுவும் உனக்கும் சாத்தியமே என்று நினை.
42
என் எண்ணமோ அல்லது செய்கையோ தவறு என்று எனக்கு எவனாவது அறிவுறுத்துவானானால், நான் அத்தவறைச் சந்தோஷமாய்த் திருத்திக்கொள்வேன். ஏனெனில் நான் சத்தியத்தையே நாடுகிறேன். சத்தியம் யார்க்கும் எக்காலத்தும் துன்பம் தந்ததில்லை. குற்றத்திலும் அறியாமையிலும் வாழ்பவன்தான் உண்மையில் கஷ்டப்படுபவன்.
43
என் கடமையை நான் செய்கிறேன், மற்றெதுவும் எனக்கு லட்சியமில்லை.
44
தேவர்களை வணங்கு, மனிதர்க்கு உதவி செய். வாழ்நாள் சொற்பம். உலக வாழ்வின் பயன் ஒன்றே, அதாவது பக்தி நிறைந்த மனமும் பொது நன்மைக்குரிய
செயலுமே.
45
மார்க்கன் என்ற நிலைமையில் என் ஊரும் தேசமும் ரோமாபுரி. மனிதன் என்ற முறையிலோ என் ஊரும் தேசமும் உலகமேயாகும். இவ்விரண்டுக்கும் பயன் தருவதுதான் எனக்கும் பயன் தருவதாகும்.
46