பக்கம்:இதய உணர்ச்சி.pdf/40

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

இதய


விட்டால் அவைகளை இழக்க நேரிடும் பொழுது மிகுந்த துயரம் அடைவாய்.

56

★ ★ ★

ன்னுள்ளேயே தனித்திரு. நீதியானதைச் செய்வதில் திருப்தியடைவதும் அதனால் மனச்சாந்தி பெறுவதும் ஆன்மாவின் இயற்கையாகும்.

57

★ ★ ★

ன் உள்ளே நோக்கி வருவாய். சகல நன்மைகளின் ஊற்றும் உன் உள்ளேயே இருக்கின்றது. அந்த ஊற்று தோண்டத் தோண்ட ஊறிப் பொங்கி வரும்.

58

★ ★ ★

ருவன் பரமஹம்சனா யிருப்பினும் அவனை மனிதர் அவ்வாறு மதியாதிருப்பது எப்பொழுதும் சாத்தியம் என்பதை உணர்வாய்.

59

★ ★ ★

ன்ப வாழ்விற்கு அவசியமான பொருள்கள் மிக மிகச் சொற்பமே.

60

***

வ்வொரு நாளும், “இது என் இறுதி நாளாகப் போய்விடலாம்” என நினைத்தே அதற்கேற்ப நடந்து கொண்டு, பரபரப்பும், சோம்பலும், வஞ்சகமும் இல்லாமல் ஒழுகுபவன் தான் ஒழுக்கம் பூரணமாய் நிறைந்தவன்.

61

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதய_உணர்ச்சி.pdf/40&oldid=1105891" இலிருந்து மீள்விக்கப்பட்டது