பக்கம்:இதய உணர்ச்சி.pdf/41

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உணர்ச்சி

39


தைவிட ஹாஸியகரமான விஷயம் வேறென்ன? தன் தீக்குணத்தினின்று தப்பி ஓடுவது சாத்தியமாயிருக்க ஒருவன் அதனின்று தப்பி ஓடப் பார்க்காமல், தப்பி ஓடுதல் அசாத்தியமாயிருக்கிற பிறனுடைய தீமையினின்றும் தப்பி ஓடப் பார்க்கிறான்.

62

★ ★ ★

நீ ஒருவனுக்கு ஒரு நன்மை செய்கிறாய், அவன் அந்த நன்மையைப் பெறுகிறான். இவ்விரண்டு நன்மைகளும் போதாவோ? மூன்றாவது ஒன்றை ஏன் எதிர் பார்க்கிறாய்?

மூடர்தான் புகழாவது கைம்மாறாவது எதிர்பார்ப்பார்.

63

★ ★ ★

யனுடையதைப் பெறுவத்ற்கு யாரும் சலிப்பதில்லை. இயற்கையின்படி நடப்பதுதான் பயன் தருவதாகும். ஆயின், பிறர்க்கு உபகாரம் செய்து அதனால் ஆன்ம லாபம் பெறுவதற்கு நீ சலியாதே.

64

★ ★ ★

பிறர் என்ன நினைப்பர் என்ற விசாரத்தை விட்டுவிடு. உன் மெய் இயல்பாகிய ஆன்மா கூறுவது போல் இனி வாழ்வதிலேயே திருப்தியுற்றிரு. ஆகையின் உன் ஆன்மா கூறுவதைக் கவனி; வேறொன்றிலும் உன் மனத்தைச் சிதற விடாதே.

ன்பத்தை எங்கு தேடி அலைந்தாலும் அதைத் தர்க்கத்திலும் காண முடியாது, புகழிலும் காண முடியாது, செல்வத்திலும் காண முடியாது, உலகானு பவத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதய_உணர்ச்சி.pdf/41&oldid=1123693" இலிருந்து மீள்விக்கப்பட்டது