________________
மு. கருணாநிதி தரப்படவில்லை" அப்போது! 25 இதற்கொரு போர்" நடக்கும் "சாப்பாட்டிலே உப்பில்லை" இதற்கொரு சத் யாக்கிரகம் நடத்தியிருக்கிறார்கள் இந்த சண்ட மாருதர்கள்! குளிப்பதற்குத் தண்ணீர் போதவில்லை இதற்கொரு சத்தியப் போராட்டம் துவக்கியிருக்கி றார்கள் இன்றைக்குச் சர்க்காராய் மாறிவிட்ட சன் மார்க்க சீலர்கள் 1 மோருக்கு, உப்புக்கு, தண்ணீருக்குப் போராடி யவர்கள் இன்று புலிகளாக மாறி எதிர்க்கட்சிகளை எலிகளாக நினைத்து நடக்கிறார்களே; ஏன் என்று தான் நமக்குத் தெரியவில்லை. 'ஏன்' என்று கேட் டால் எடுக்கிறார்கள் அடக்குமுறைச் சட்டத்தை! இது முறையா? தகுமா? தர்மந்தானா? என்று கண்ணீரிலே எழுதுகோலைத் தோய்த்து எழுதினால் "விடாதே பறிமுதல்!' என்று வரிந்து கின்றனர். கட்டு இந்தப் பயங்கரமான சூழ்நிலை எப்போது இருக்கிறது தெரியுமா தோழர்களே? கள் ஆரியமாயைக்கும், அறிவு பயக்கும் நமது நூல் பலவற்றிற்கும் அணைபோட்டது எப்போது தெரியுமா தோழர்களே ? 68206 நல்ல கருத்துள்ள - நாட்டுக்குப் புதையல் போன்ற - நமது நாடகங்களை நடிக்கக்கூடாதென்று