பக்கம்:இதய பேரிகை.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மு. கருணாநிதி ஆகுமா நம்மால் !.... என்கின்ற பொறுப்புணர்ச்சி களால் தூண்டப்பட்டு திகைத்திருந்தோமே அந்த நிலைமைதான் மிக மிகப் பயங்கரமானது. அதைவிட பயங்கரமானது நம்மீது வீசப்பட்ட தூற்றல் அஸ்திரங்கள், கேலிக்கணைகள், பரிகாச பாணங்கள் அவதூறு அம்புகள். "இவர்களால் முடியுமா ஒரு யக்கம் நடத்த!" "இதுகள் அற்பாயுசுகள்' "சிறு பிள்ளைவிட்ட வேளாண்மை, வீடுவந்து சேருமா?" என்பதுபோன்றஏளனங்கள் நர்த்தனமாடின. "இவர்களால் முடியுமா ஒரு இயக்கம் நடத்த? என்ற சந்தேகம் மாறி, இவர்களால்தான் முடியும் என்ற பதில் கிடைத்துவிட்டது. 66 'அற்பாயுசுகள் " என்ற ஆரூடம் அழிந்து "சிரஞ்சீவிகள்" என்ற செல்லப்பெயர் சூட்டப்பட்டு விட்டது. "சிறுபிள்ளை வேளாண்மை" என்ற பழமொழி கள் பழிக்கப்பட்டு சிறு பிள்ளைகள் தரும் விளைவு பாரீர் அறுவடையைக் காணீர்-குவித்திருக்கும் போர் பாரீர் -- என்று கர்வத்தோடு கர்ச்சனை புரிந் திடும் காளையரைக் காண முடிகிறது. சிலரது சுயநலத்தோடு முடிந்துவிடும் என்ற பேச்சுக்கள் சீரழிக்கப்பட்டு மூச்செல்லாம் நாட்டுக்கே என்று முழக்கமிடும் முன்னணிவீரர்கள் பட்டாளத் தம்பிகளென பாங்கான நடைபோடும் 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதய_பேரிகை.pdf/6&oldid=1688622" இலிருந்து மீள்விக்கப்பட்டது