பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/106

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

விடுதலைப் போரில் தமிழ் பத்திரிகைகள்




சென்னை நகரிலிருந்து பம்பாய் சென்று தேசியக் காங்கிரஸ் துவக்க விழா கூட்டத்தில் பங்கேற்றவர்களில் பலர் பத்திரிகையாளர்களாக இருந்ததால், அவர்களும், அவர்களது பத்திரிக்கைகளும் அன்று முதல் அகில இந்தியத் தேசியக் காங்கிரஸ் பேரவை இயக்கத்தின் வளர்ச்சிக்காகப் பெரிதும் துணை நின்று பணியாற்றினார்கள்.

அவர்களில் ‘சுதேச மித்திரன்’ நாளேட்டை நடத்திய தி.ஜி.சுப்பிரமணிய ஐயரும், ‘தமிழ்நாடு’ என்ற தினசரியை நடத்திய டாக்டர் வரதராஜலு நாயுடுவும் ஆங்கிலேயர்களின் அடக்குமுறைகளைச் சந்தித்தவர்கள்” எண்கிறார் அ.மா.சாமி தனது “தமிழ் இதழ்கள் தோற்றம் வளர்ச்சி என்ற புத்தக அணிந்துரையில்.

இந்திய மக்களிடம் இருந்த சுதந்தர எழுச்சியுணர்வுகளை ஒன்று திரட்டி, பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தத் தூண்டுதல்களாக விளங்கியவை தமிழ்ப் பத்திரிகைகளே என்றால் அது மிகையன்று.

தமிழ் நாட்டில் முதன் முதலாகத் “தமிழ்ப் பத்திரிகை” என்ற ஒரு பத்திரிகை வெளிவந்தது. அந்த ஏடு முழுக்க முழுக்க இயேசு கொள்கைக்காகவே பணியாற்றியது என்று மு.இ.முகம்மது மரைக்காயர் எமுதிய ‘தமிழ் இலக்கியக் கொள்கை’ என்ற நூல் கூறுகின்றது.

ஆனால், அ.மா.சாமி என்பவர், தமிழின் முதல் பத்திரிகை 1812 - ஆம் ஆண்டில் வெளிவந்தது என்றும், அதன் பெயர் “மாசத் தினச் சரிதை” என்றும் கூறுகின்றார்.

கி.பி.1812 - ஆம் ஆண்டுக்கும் - 1882 - ஆம் ஆண்டில் ‘சுதேச மித்திரன்’ தமிழ் வார இதழ் வெளிவந்ததற்கும் இடைபட்ட 70 ஆண்டுகளில் எந்தத் தமிழ்ப் பத்திரிகையும் வரவில்லையா என்று ஆய்ந்தால், 1831 ஆம் ஆண்டில் கிறித்துவ சங்கத்தினர் ‘தமிழ் மேகசி’ன் (Tamil Magazine) என்ற ஒரு பத்திரிகையை நடத்தியிருப்பதாகத் தெரிகின்றது.

பெர்சிவல் பாதிரியார் என்ற ஓர் ஆங்கிலேயர். சென்னை நகரில், 1856 ஆம் ஆண்டில் “தினவர்த்தமானி” என்ற ஒரு