பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/210

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

208

தற்கால - கட்சி சார்பற்ற தமிழ்ப் பத்திரிகைகள்


ரைட்ஹானரபில் வி.எஸ்.சீநிவாச சாஸ்திரி, இராஜாஜி, நாவலர் சத்தியமூர்த்தி ஐயர், தமிழ்த் தென்றல் திரு.வி.க. ஆகியோர் அல்லயன்ஸ் பதிப்பகத்தைப் பாராட்டி மகிழ்ந்துள்ள சம்பவம் பதிப்பக உலகமே அனுபவிக்காத ஓர் அரிய சம்பவமாகும்.

இத்தகைய ஆற்றலும், அனுபவமும் உள்ள திரு. குப்புசாமி ஐயர், ‘விவேகபோதினி’ என்ற தமிழ் இலக்கிய மாதப் பத்திரிகையை நடத்தி தமிழ் உலகுக்கு இலக்கியத் தொண்டு புரிந்துள்ளார். அவர் வகுத்த பாதையில் அவரது பெயரன் திரு. சீநிவாசன் இன்று ஆற்றிவரும் அரிய பணியை எழுத்துலகம் என்றும் மறவாது. வாழ்க, வளர்க, அல்லயன்ஸ் சீநிவாசன் எழுத்துத் துறையின் சேவைத் திறம்!