பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/220

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

218

ஆறு நாடுகளின் உருவாக்கமே நமது குடியரசு சட்ட அமைப்பு



இத்தகைய இனமான பத்திரிகைகளை வளரவிடக் கூடாது என்ற ஆணவ மனப் போக்கில், பத்திரிகைகளை அடக்கி, ஒடுக்கி, நசுக்க வேண்டும் என்ற கொடூரச் சிந்தனையோடு கொண்டுவரப்பட்ட சட்டம் தான் 1857 - ஆண்டு இதழ்ச் சட்ட எண் 15 என்ற சட்டமாகும். இந்தச் சட்டத்தை எல்லா இந்திய பத்திரிகைகளும் ஒருமனதாக வாய்ப்பூட்டுச் சட்டம் என்று எழுதியே எதிர்த்தன. இந்த சட்டத்தின் நோக்கம் என்ன?

1. அச்சகம் அமைக்க முன் அனுமதி பெற வேண்டும்.

2. ஆங்கில ஆட்சியின் மீது வெறுப்புணர்ச்சிகளை உண்டாக்கும் செய்திகள் தடை செய்யப்படும்.

மேற்கண்ட சட்டத்தின் கொடுமையான அடக்கு முறைகளைத் தாங்கமுடியாமல் பெங்கால் ஹாரகாரு BENGAட HARKAR.சுல்தான் அல்-அக்பர் SULTAN-AL-AKBAR சமாச்சா SAMACHA, பிரஸ் ஆப்ஃ இண்டியா PRESS OF INDIA, பாம்பே டைம்ஸ் BOMBAY TIMES போன்ற பத்திரிகைகள் நிறுத்தப்பட்டு விட்டன என்று கூறுவதைவிட; தடைச் சட்டத்துக்குப் பலி கொடுக்கப்பட்டுவிட்டன என்றே சொல்லலாம்.

லார்டு ரிப்பன் எங்களப்பன் என்று இந்திய மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட ரிப்பன் பிரபு : கம்பெனி ஆங்கிலர்; ஆட்சியின் தலைமை ஆளுநராக வந்தார். அவர் 1882-ஆம் ஆண்டில் இந்தச் சட்டத்தின் ஆணிவேரையே அறுத்தெறிந்தார்.

7. 1867-ஆம் ஆண்டில் உருவான
இதழ் சீர்திருத்தச் சட்டம். எண். 25

இந்தச் சட்டம் ரிப்பன் பிரபு ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்டமாகும்.

பத்திரிகைகள் நன்கு வளர்ச்சி பெறும் நோக்கங்களோடு இந்தச் சட்டம் பல சீர்திருத்தங்களைப் பெற்றிருந்தது.