பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/252

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

250

பத்திரிக்கைகளைப் பாதுகாக்கும் ஃபெரோஸ் காந்தி சட்டம்!



விதி விலக்குகள்:

இந்தச் சட்டத்தின்படி, ஒருவரின் படைப்பிலிருந்து ஆய்வுக்காகவோ, தனிப்பட்ட படிப்புக்காகவோ, மதிப்பீட்டிற்காகவோ சில பகுதிகளை எடுத்துப் பயன்படுத்தினால் அது குற்றமாகாது.

நியாயமான முறையில் மேற்கோள் காட்டவோ, சரியான முறையில் சுருக்கத்தைக் கூறவோ சட்டம் இடம் த்ருகின்றது.

ஒருவரின் படைப்பிலிருந்து சிலவற்றைப் பயன்படுத்தும்பொழுது மூலத்தைக்குறிப்பிடவேண்டும்.

செய்தி தாட்களுக்குச் சிறப்பு விதி விலக்குகள் வழங்கப் பெற்றுள்ளன. பத்திரிகைகள் பொதுநலன் கருதி, எந்த இலக்கியப் படைப்பையும், நாடகத்தையும், இசையையும் வெளியிடலாம். இது நடப்புச் செய்திகளை வெளியிடும் வகையில் சேரும். ஆனால், ஒரு பத்திரிகையில் வெளியான கட்டுரையை அப்படியே சொல்மாறாமல் வெளியிட வேண்டுமானால் அந்த இதழின் அனுமதியைப் பெறவேண்டும். இதழ்கள் பதிப்புரிமைச் சட்டத்தின் எல்லைக்குள் செயல்படுவது நல்லது.

8. இளம்பருவ மனங்கள்
கெடாமல் தடுக்கும் சட்டம்:

இளம் வயதுடைய சிறுவர், சிறுமிகள், வாலிபர்கள் உள்ளங்களைப் பாழ்படுத்தக்கூடிய வெளியீடுகளைத் தடை செய்யும் சட்டம் 1956-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்டது. இதற்கு Young Persons Harmful Publications Act என்றுபெயர்.

குற்றங்களை அந்த உள்ளங்கள் பெறத் தூண்டுகின்ற, துராக்கிரமமான கொடும் செயல்களில் ஈடுபடச் செய்கின்ற, பய உணர்வுகளைத் தூண்டுகின்ற கதைகள், படங்களைக் கொண்ட புத்தகங்களையோ, பத்திரிகைகளையோ, கையேடுகளையோ, கைப் பிரதிகளையோ, செய்தித் தாட்களையோ மற்ற பிறவற்றையோ, சிறுவர், சிறுமி, வாலிப உள்ளங்களைப் பாழ்படுத்துகின்ற தன்மையில் வெளியிடுகளை வெளியீடுவது தண்டனைக்குரிய குற்றங்களாகும்.